Tuesday, March 19, 2013

சாம்பார் பொடி / Sambar Podi




தேவையான பொருள்கள் -
  1. மிளகாய் வத்தல் - 1/4 கிலோ
  2. கொத்தமல்லி - 1/4 கிலோ 
  3. சீரகம் - 100 கிராம்
  4. துவரம் பருப்பு - 25 கிராம்
  5. கடலைப் பருப்பு - 25 கிராம்
  6. மிளகு - 25 கிராம்
  7. வெந்தயம் - 25 கிராம்
செய்முறை -
  1. முதலில் மிளகாய் வத்தலை வெயிலில் நன்கு காய வைக்க வேண்டும்.
  2. கொத்தமல்லி, சீரகம், துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகு, வெந்தயம் ஆகியவற்றை தனித் தனியாக ஒரு வாணலியில் போட்டு சூடு வந்தவுடன் ஒரு தட்டில் பரப்பி விடவும் .
  3. வத்தல் காய்ந்ததும் எல்லாப் பொருள்கள்களையும் ஒன்றாக சேர்த்து மெசினில் கொடுத்து அரைக்கவும்.
  4. இந்த சாம்பார் பொடியை சாம்பார், புளி குழம்பு, கூட்டு வகைகளுக்கு  உபயோகிக்கலாம்.
  5. காற்று புகாத பாட்டிலில் போட்டு 3 மாதங்கள் வரை உபயோகிக்கலாம்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...