Wednesday, April 3, 2013

மாவத்தல் குழம்பு


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. மாவத்தல்  அல்லது  மாந்தொலி - 1
  2. சாம்பார் பொடி -1 1/2 மேஜைக்கரண்டி
  3. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  4. புளி - சிறு கோலி அளவு
  5. உப்பு - தேவையான அளவு                       
அரைக்க -
  1. தேங்காய்த் துருவல் - 4 மேஜைக்கரண்டி
  2. சின்ன வெங்காயம் - 5                               
தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி
  3. சின்ன வெங்காயம் - 4
  4. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை -
  1. அரைக்க கொடுத்தவற்றை அரைத்து கொள்ளவும். சின்ன வெங்காயத்தை சிறிதாக நறுக்கி கொள்ளவும். புளியை 1 1/2 கப் தண்ணீரில் ஊற வைத்து கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் போட்டுத் தாளிக்கவும்.
  3. தாளித்ததும் புளியைக் கரைத்து கடாயில் ஊற்றவும்.கொதித்தவுடன் சாம்பார் பொடி, மாவத்தல், மஞ்சள்தூள், உப்பு போட்டு 10 நிமிடங்கள் அல்லது மசாலா வாசனை போகும் வரை கொதிக்க  விட வேண்டும்.
  4. பின்னர் அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும். குழம்பு கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி  விடவும். மாவத்தல் குழம்பு ரெடி.
  குறிப்புகள் -
  1. மாவத்தல் என்பது காய்ந்த மாங்காய் துண்டுகள். தேவையான அளவு மாங்காய் வாங்கி தோல் சீவாமல் 4 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மாங்காய் துண்டுகள் மேல் தேவையான அளவு உப்பு மற்றும் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து ஒரு நாள் முழுவதும் ஊற வைக்க வேண்டும். அதன்பின் எல்லா மாங்காய் துண்டுகளையும் வெயிலில் 2 நாட்கள் வரை காய வைக்கவும். இதை மாவத்தல்/மாந்தொலி என்று சொல்லுவார். மாவத்தலை ஒரு காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைத்து ஒரு ஆண்டு வரையிலும் வைத்து உபயோகிக்கலாம் . 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...