Wednesday, August 28, 2013

தட்டப்பயறு சுண்டல்



பரிமாறும்அளவு - 4 நபருக்கு

தேவையான பொருள்கள் -

  1. தட்டப்பயறு - 1 கப் (200 கிராம்)
  2. தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி
  3. உப்பு - தேவையான அளவு

தாளிக்க -

  1. நல்லெண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
  2. காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
  3. கடுகு - 1 தேக்கரண்டி
  4. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
  5. மிளகாய் வத்தல் - 2
  6. கறிவேப்பிலை - சிறிது

செய்முறை -

  1. முதலில் தட்டப்பயறை நன்றாக கழுவி தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. ஊறிய பயறு, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். நீராவி அடங்கியதும் மூடியை திறந்து தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும். உப்பு தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும்.                                  
  3. அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வத்தல், காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். பிறகு கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, தட்டப்பயறு சேர்த்து நன்றாக கிளறவும். 
  4. கடைசியாக தேங்காய் துருவலை சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். சுவையான தட்டப்பயறு சுண்டல் ரெடி.                                               
                                             
                   .





2 comments:

  1. romba healthy aana sundal.super.happy to follow you.

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய வலைப்பூ வருகைக்கு நன்றி .உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றி.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...