Thursday, October 31, 2013

முந்திரிக் கொத்து

தேவையான பொருள்கள் -
  1. மைதா மாவு - 75 கிராம் 
  2. பாசிப்பயறு  - 100 கிராம் 
  3. அச்சு வெல்லம் - 100 கிராம் 
  4. பச்சரிசி  - 50 கிராம்
  5. தேங்காய் துருவல் - 50 கிராம்
  6. முந்திரி பருப்பு - 10
  7. ஏலக்காய் பொடி - 1/4 தேக்கரண்டி
  8. நெய் - 2 மேஜைக்கரண்டி 
  9. சோடா உப்பு - 1/4 தேக்கரண்டி 
  10. உப்பு - 1/4 தேக்கரண்டி 
  11. எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை -
  1. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் பாசிப்பருப்பை போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும். வறுத்ததை தனியாக எடுத்து வைக்கவும்.
  2. அதே கடாயில் தேங்காய் துருவல், முந்திரிப் பருப்பு இரண்டையும் நன்கு வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
  3. அதே கடாயில் பச்சரிசியை போட்டு வறுத்துக் கொள்ளவும். வறுத்த எல்லா பொருள்களையும் சிறிது நேரம் ஆற விடவும்.
  4. வறுத்த பாசிப்பருப்பு மற்றும் பச்சரிசியை மிக்ஸ்சியில் பொடித்துக் கொள்ளவும்.
  5. தேங்காய் துருவல், முந்திரிப்பருப்பு இரண்டையும் மிக்ஸ்சியில் பொடித்துக் கொள்ளவும்.
  6. அச்சு வெல்லத்துடன் 50 மில்லி தண்ணீர் சேர்த்து கம்பி பதம் வரும் வரை பாகு காய்ச்சி வடி கட்டி வைத்துக் கொள்ளவும்.
  7. மைதா மாவில் 1/4 தேக்கரண்டி உப்பு, சோடா உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
  8. அரைத்த பாசிப்பருப்பு, பச்சரிசி, தேங்காய் துருவல், முந்திரிபருப்பு பொடி, ஏலக்காய் பொடி, நெய் எல்லாவற்றையும் கலந்து வெல்ல பாகை சிறிது சிறிதாக ஊற்றி உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளவும்.
  9. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் 4 அல்லது 5 உருண்டைகளை எடுத்து மைதா மாவில் முக்கி எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்.
  10. மீதமுள்ள எல்லா உருண்டைகளையும் இதே முறையில் போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான முந்திரிக்கொத்து ரெடி.

Tuesday, October 29, 2013

சாளை மீன் வறுவல்/ Chaala Fish Fry / Sardine Fish Fry

                                       
பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. சாளை மீன்/ மத்தி மீன் - 10
  2. மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி 
  3. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி 
  4. உப்பு - தேவையான அளவு 
  5. எலுமிச்சை சாறு - 2 மேஜைக்கரண்டி 
  6. எண்ணெய் - 100 மில்லி 
     செய்முறை -
  1. முதலில் மீனின் தலைப்பகுதி, வால் பகுதி இரண்டையும் வெட்டி நன்றாக கழுவி வைத்துக் கொள்ளவும்.                                                                                  
  2. மிளகாய் தூள், மஞ்சள்தூள், உப்பு மூன்றையும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் போல் வைத்துக் கொள்ளவும்.
  3. பேஸ்ட்டை எடுத்து மீனின் மீது நன்கு தடவி 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
  4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான சூட்டில் வைத்து மீன்களை போடவும். சிறுது நேரம் கழித்து திருப்பி போட்டு வறுக்கவும். இரண்டு புறமும் நன்கு சிவந்ததும் எடுத்து விடவும்.                                                                      
  5. மீதமுள்ள எல்லா மீன்களையும் இதே போல் வறுத்து எடுக்கவும். சுவையான சாளை மீன் வறுவல் ரெடி.

ரவா லட்டு / Rava Ladoo

                                                               

தேவையான பொருள்கள் -
  1. ரவை - 100 கிராம் 
  2. சர்க்கரை - 100 கிராம்
  3. தேங்காய் துருவல் - 50 கிராம்  
  4. நெய் - 2 மேஜைக்கரண்டி 
  5. சூடான பால் - 25 மில்லி 
  6. முந்திரிபருப்பு - 10                                         
செய்முறை -
  1. அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் மிதமான சூட்டில் வைத்து ரவையை நல்ல பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். 
  2. அதே கடாயில் தேங்காய் துருவல், முந்திரிப்பருப்பு இரண்டையும் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.                                      
  3. நன்றாக ஆறிய பின் ரவையை மிக்ஸ்சியில் பொடித்துக் கொள்ளவும்.
  4. சர்க்கரை, முந்திரிப்பருப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸ்சியில் பொடித்துக் கொள்ளவும்.
  5. வறுத்த தேங்காய் துருவலை தனியாக மிக்ஸ்சியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
  6. பின்னர் பொடித்த ரவை, சர்க்கரை, முந்திரிபருப்பு, தேங்காய் துருவல் மீதமுள்ள ஒரு மேஜைக்கரண்டி நெய் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்.
  7. லட்டு பிடிக்கும் பதத்திற்கு காய்ச்சிய பாலை சிறிது சிறிதாக ஊற்றி கிளறவும். பிறகு சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும். 
  8. சுவையான ரவா லட்டு ரெடி. ஈஸியாக செய்யக்கூடிய ரெசிபி இது.

Saturday, October 26, 2013

பாகற்காய் பொரியல் / BitterGourd Fry


பரிமாறும்  அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பாகற்காய் - 150 கிராம் 
  2. மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி 
  3. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  4. சர்க்கரை - 2 மேஜைக்கரண்டி
  5. உப்பு - தேவையான அளவு
தாளிக்க -
  1. எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
  4. சின்ன வெங்காயம் - 10
  5. கறிவேப்பிலை - சிறிது
  6.  பச்சை மிளகாய் - 1
செய்முறை -
  1. பாகற்காயை பொடிதாக நறுக்கி வைக்கவும். சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டி வைக்கவும். மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து  எண்ணெய்  ஊற்றி  சூடானதும் கடுகு  போட்டு  தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை ஒவ்வொவன்றாக சேர்த்து  வதக்கவும்.
  3. வெங்காயம் பாதி வதங்கியதும்  பாகற்காய், சர்க்கரை, உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து கிளறவும். சர்க்கரை சேர்த்திருப்பதால் சிறிது தண்ணீர் விடும். சிம்மில் வைத்து 10 நிமிடங்கள் அடிப்பிடிக்காமல் கிளறவும்.
  4. தண்ணீர்  நன்கு வற்றியதும், பாகற்காய் பொன்னிறமாக வந்ததும் மிளகாய் தூள் சேர்த்து கிளறி  அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான பாகற்காய் பொரியல் ரெடி.

Wednesday, October 23, 2013

சாளை மீன் குழம்பு / Chaala Fish Curry/ Sardine Fish Curry

                                                       
பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. சாளை மீன் - 10
  2. உப்பு - தேவையான அளவு 
  3. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி 
  4. புளி - சிறிய எலுமிச்சை அளவு                      
வறுத்து அரைக்க -
  1. மிளகாய் வத்தல் -3
  2. கொத்தமல்லி - 3 மேஜைக்கரண்டி 
  3. சீரகம் - 1 தேக்கரண்டி 
  4. மிளகு-1 தேக்கரண்டி 
  5. தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி 
  6. கறிவேப்பிலை - சிறிது 
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு -1/2 தேக்கரண்டி
  3. உளுந்தம்பருப்பு -1/2 தேக்கரண்டி 
  4. வெந்தயம் -1/2 தேக்கரண்டி 
  5. வெங்காயம் -1/4 
  6. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. முதலில் மீனை சுத்தமாக கழுவி வைக்கவும். புளியை ஒரு கப் (200மில்லி) தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக்கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாயைமிதமான சூட்டில் வைத்து மிளகாய் வத்தல், கொத்தமல்லி, மிளகு எல்லாவற்றையும் சேர்த்து லேசாக வறுத்து அடுப்பை ஆப் பண்ணவும். 
  3. வறுத்த பொருள்களுடன் சீரகம், தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்து கிளறி சிறிது நேரம் ஆற விடவும்.
  4. நன்றாக ஆறிய பின் மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
  5. அதே கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு  வெடித்தவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  6. வெங்காயம் நல்ல பொன்னிறமானதும் கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்து தாளித்து கரைத்து வைத்துள்ள புளித் தண்ணீரை ஊற்றவும்.
  7. புளித் தண்ணீர் கொதித்தவுடன் அரைத்து வைத்துள்ள மசாலா, உப்பு, மஞ்சள் தூள் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். 
  8. மசாலா வாடை போனதும் மீன்களை சேர்த்து வேக விடவும். 5 நிமிடம் கழித்து அடுப்பை ஆப் பண்ணி விடவும்.
  9. சுவையான சாளை மீன் குழம்பு ரெடி.

Thursday, October 17, 2013

கீரை மசியல்


பரிமாறும் அளவு - 3 நபருக்கு

தேவையானபொருள்கள் -
  1. அரைக்கீரை - 4 கப்
  2. பச்சை மிளகாய் - 2
  3. சின்ன வெங்காயம் - 3
  4. பூண்டுப் பல் - 3
  5. தக்காளி - 1 (சிறியது)
  6. சோடா உப்பு - 1/2 தேக்கரண்டி
  7. தேங்காய் துருவல் - 2 மேஜைக்கரண்டி
  8. உப்பு - தேவையான அளவு                             
தாளிக்க -
  1. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
  2. கடுகு - 1 தேக்கரண்டி
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
  4. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை -
  1. கீரையை நன்றாக ஆய்ந்து தண்ணீரில் கழுவி சுத்தப்படுத்தி வைக்கவும். பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தோலுரித்து சிறிதாக நறுக்கிக் வைக்கவும்.                     
  2. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கீரை, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி, தேங்காய் துருவல்,உப்பு, சோடா உப்பு எல்லாவற்றையும் போட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும்.      
  3. கீரையில் தண்ணீர் சத்து இருப்பதால் தண்ணீர் சேர்க்கத் தேவை இல்லை. கை விடாமல் 2 நிமிடம் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
  4. ஆறிய பின் மிக்ஸ்சியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து பாத்திரத்திற்கு மாற்றி விடவும்.           
  5. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து கீரையோடு சேர்த்து நன்றாக கலக்கி விடவும். கீரை மசியல் ரெடி.

Wednesday, October 16, 2013

இடியாப்பம் / Idiyappam - 100 வது பதிவு

இது என்னுடைய 100 வது பதிவு. எனக்கு தொடர்ந்து ஆதரவு தரும் எல்லாருக்கும் நன்றி.

                                   
பரிமாறும் அளவு  - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. இட்லி அரிசி - 200 கிராம்
  2. உப்பு - தேவையான அளவு
  3. நல்லெண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
  செய்முறை -
  1. அரிசியை கழுவி 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும். ஊறிய பிறகு தண்ணீரை வடித்து விட்டு கிரைண்டரில் உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.          
  2. அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து அரைத்து வைத்துள்ள மாவை போட்டு 2 நிமிடம் வதக்கி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
  3. வதக்கிய மாவை இடியாப்ப அச்சில் போட்டு வட்டமாக இடியப்பா தட்டில் பிழியவும். 
  4. மீதமுள்ள மாவையும் பிழிந்து  இடியாப்ப ஸ்டாண்டில் மாட்டவும்.             
  5. இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். பிறகு இடியாப்ப ஸ்டாண்டை உள்ளே வைத்து 10 நிமிடம் மூடி போட்டு வேக வைக்கவும். இடியப்பா ஸ்டாண்ட் இல்லாவிட்டால் இட்லி தட்டில் பிழிந்தும் செய்யலாம்.                                                  
  6. சுவையான இடியாப்பம் ரெடி. இடியாப்பத்தை தேங்காய் பால் அல்லது குருமாவுடன் பரிமாறலாம்.

Saturday, October 12, 2013

ஈசி தேங்காய் சாதம் / Coconut Rice

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. அரிசி - 150 கிராம் 
  2. தேங்காய் துருவல் - 100 கிராம் 
  3. உப்பு - தேவையான அளவு                         
     தாளிக்க -
  1. தேங்காய் எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி 
  5. முந்திரிப் பருப்பு - 6
  6. மிளகாய் வத்தல் - 2
  7. காயத்தூள் - 1/2 தேக்கரண்டி 
  8. கறிவேப்பிலை - சிறிது                                   
     செய்முறை -
  1. முதலில் அரிசியை கழுவி உப்பு மற்றும் 300 மில்லி தண்ணீர் சேர்த்து குக்கரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. அரை மணி நேரம் கழித்து குக்கரை அடுப்பில் வைக்கவும். நீராவி வந்ததும் வெயிட் போடவும். முதல் விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் கழித்து அடுப்பை ஆப் பண்ணவும்.
  3. நீராவி அடங்கியதும் மூடியை திறந்து சாதத்தை எடுத்து தட்டில் பரப்பி 10 நிமிடம் ஆற விடவும்.
  4. அடுப்பில் கடாயை வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வத்தல், கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு போட்டு தாளிக்கவும்.
  5. கடுகு வெடித்தவுடன் காயத்தூள், கறிவேப்பிலை, முந்திரிப் பருப்பு, தேங்காய் துருவல் சேர்த்து வறுக்கவும்.                                                    
  6. தேங்காய் துருவல் சிவந்து வரும் போது சாதத்தை போட்டு நன்றாக கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். உப்பு தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும். சுவையான தேங்காய் சாதம் ரெடி.                                                   

முருங்கைக்காய் பொரியல் / Drumstick Fry

பரிமாறும்அளவு - 3 நபருக்கு

தேவையானபொருள்கள் -
  1. முருங்கைக்காய் துண்டுகள் - 25
  2. மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
  3.  சாம்பார் பொடி - 1/2 தேக்கரண்டி
  4.  மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
  5.  தேங்காய் துருவல் - 1 மேஜைக்கரண்டி
  6.  உப்பு - தேவையானஅளவு                               
     தாளிக்க -
  1. எண்ணெய் -3 மேஜைக்கரண்டி
  2.  கடுகு -1 தேக்கரண்டி
  3.  உளுந்தம்பருப்பு -1/2 தேக்கரண்டி
  4. பெரிய வெங்காயம் -3/4 பங்கு
  5. கறிவேப்பிலை - சிறிது
     செய்முறை -
  1. வெங்காயத்தை பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.                                                              
  2. ஒரு பாத்திரத்தில் முருங்கை காய் முழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி உப்பும் சேர்த்து அடுப்பில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும். காய்கள் நன்றாக வெந்ததும் தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும்.                                                  
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  4. வெங்காயம் நல்ல பொன்னிறமானதும் மிளகாய்த் தூள், சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து 1 நிமிடம் கிளறி அவித்து வைத்துள்ள முருங்கைக்காய் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறவும்.
  5. உப்பு தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும். இறுதியில் தேங்காய் துருவலை சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.         
  6. முருங்கைக்காய் பொரியல் ரெடி. சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்துடன் சேர்த்து பரிமாறலாம்.
Related Posts Plugin for WordPress, Blogger...