Thursday, November 28, 2013

கார்த்திகை கொழுக்கட்டை

 
தேவையான பொருள்கள் -
  1. பச்சரிசி மாவு - 200 கிராம் 
  2. அச்சு வெல்லம் - 100 கிராம்
  3. தேங்காய் துருவல் - 100 கிராம் 
  4. எள் - 1 மேஜைக்கரண்டி 
  5. ஏலக்காய் - 1 தேக்கரண்டி 
  6. நெய் - 1 மேஜைக்கரண்டி
     செய்முறை -
  1. முதலில் அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் எள்ளை போட்டு மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும். வறுத்ததை தனியாக எடுத்து வைக்கவும்.
  2. அதே கடாயில் ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி தேங்காய் துருவலை வறுத்துக் கொள்ளவும்.
  3. அச்சு வெல்லத்தை 100 மில்லி தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வடி கட்டிக் கொள்ளவும்.
  4. ஒரு பாத்திரத்தில் அரிசி மாவுடன் தேங்காய் துருவல், எள், ஏலக்காய் தூள், நெய் எல்லாவற்றையும் கலந்து வெல்ல பாகை சிறிது சிறிதாக ஊற்றி உருண்டையாக உருட்டிக் கொள்ளவும்.
  5. உருட்டி வைத்துள்ள மாவில் ஒரு எலும்பிச்சை அளவு மாவை எடுத்து படத்தில் உள்ளது போல ஓவல் சைசில் கொழுக்கட்டை பிடிக்கவும். மீதமுள்ள மாவிலும் இவ்வாறு செய்து வைத்துக் கொள்ளவும்.
  6. பின்னர் இட்லித் தட்டில் கொழுக்கட்டைகளை வைத்து 10 நிமிடம் வேக வைக்கவும். சுவையான கொழுக்கட்டை ரெடி.

Friday, November 22, 2013

சென்னா மசாலா / Channa Masala

                 
பரிமாறும் அளவு - 2 நபருக்கு 

தேவையான பொருள்கள் -
  1. வெள்ளை கொண்டைக்கடலை - 150 கிராம் 
  2. உப்பு - தேவையான அளவு 
  3. சென்னா மசாலா பொடி - 1 மேஜைக்கரண்டி
அரைக்க -
  1. மிளகாய்தூள் - 1 தேக்கரண்டி 
  2. மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி 
  3. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி 
  4. கறிமசால் பொடி - 1/2 தேக்கரண்டி 
  5. மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி 
  6. சோம்பு - 1/2 தேக்கரண்டி 
  7. பட்டை - 1/2 இன்ச் அளவு 
  8. கிராம்பு - 1
  9. தக்காளி - 1
        
   தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. பெரிய வெங்காயம் -1
  3. கறிவேப்பில்லை - சிறிது 
 செய்முறை -
  1. முதலில் கொண்டைக்கடலையை 8  மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.                                      
  2. ஊறிய கொண்டைக்கடலை, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். 
  3. நீராவி அடங்கியதும் மூடியை திறந்து தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும். 3 மேஜைக்கரண்டி கொண்டைக்கடலையை எடுத்து அரைக்க கொடுத்துள்ள பொருள்களுடன் சேர்த்து மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.                                             
  4.  வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டி வைத்துக் கொள்ளவும்.  
  5. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  6. வெங்காயம் பொன்னிறமானதும் அரைத்து வைத்துள்ள கலவை, சென்னா மசாலா பொடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.
  7. பிறகு அவித்து வைத்துள்ள கொண்டைக்கடலை மற்றும் 200 மில்லி தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.                                                                                              
  8. மசாலா வாசனை அடங்கி கிரேவி கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான சென்னா கிரேவி ரெடி. 

ஆப்பிள் மில்க் ஷேக் /Apple Milk Shake

     
பரிமாறும் அளவு  - 2 நபருக்கு

தேவையானபொருள்கள் -
  1. ஆப்பிள் - 1
  2. பால் - 100 மில்லி
  3. சர்க்கரை - 4 மேஜைக்கரண்டி
  4. தண்ணீர் -  200 மில்லி                                                                              

செய்முறை -
  1. ஆப்பிளை தோலுரித்து சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெட்டிய துண்டுகளோடு சர்க்கரை, 50 மில்லி பால் இரண்டையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸ்சியில் போட்டு அரைக்கவும்.
  2. அரைத்ததை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவும். அதோடு மீதமுள்ள பால், 200 மில்லி  தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும். ஆப்பிள் ஜூஸ் ரெடி. டம்ளரில் ஊற்றி பரிமாறவும். பிரிஜ்ஜில் வைத்து பருகினால் இன்னும் ருசியாக இருக்கும்.

சௌசௌ கேரட் பொரியல் / Chow Chow Carrot Poriyal

   

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. சௌசௌ துருவியது - 150 கிராம் 
  2. கேரட் துருவியது - 150 கிராம் 
  3. தேங்காய் துருவல் - 2 மேஜைக்கரண்டி 
  4. உப்பு - தேவையான அளவு                             
     தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. சீரகம் - 1/4 தேக்கரண்டி 
  5. பெரிய வெங்காயம் - 1
  6. பச்சை மிளகாய் - 2
  7. கறிவேப்பிலை - சிறிது                                   
     செய்முறை -
  1. முதலில் வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம்பருப்பு,  சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் பொன்னிறமானதும் துருவி வைத்துள்ள சௌசௌ, கேரட், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து வேகும் வரை கிளறவும்.               
  4. நன்கு வெந்தவுடன் தேங்காய் துருவலை சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான சௌசௌ கேரட் பொரியல் ரெடி.

காளான் குழம்பு / Mushroom curry


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. காளான் - 1/4 கிலோ 
  2. தக்காளி -1
  3. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  4. உப்பு - தேவையான அளவு                            
வறுத்து அரைக்க -
  1. மிளகாய் வத்தல் - 2
  2. கொத்தமல்லி - 3 மேஜைக்கரண்டி 
  3. சீரகம் - 1 மேஜைக்கரண்டி 
  4. மிளகு - 1/2 தேக்கரண்டி
  5. மல்லித்தழை - சிறிது 
  6. இஞ்சி - 1 இன்ச் அளவு 
  7. பூண்டு பல் - 3                                                
அரைக்க -
  1. தேங்காய் துருவல் - 50 கிராம் 
  2. சின்ன வெங்காயம் - 6                                   
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. பட்டை - ஒரு இன்ச் அளவு
  3. கிராம்பு - 3
  4. சோம்பு - 1 தேக்கரண்டி 
  5. வெங்காயம் - 1/4 பங்கு
செய்முறை -
  1. முதலில் காளானை நன்றாக கழுவி நீள வாக்கில் வெட்டி வைக்கவும். வெங்காயம், தக்காளியையும் நீள வாக்கில் வெட்டிக் கொள்ளவும்.                    
  2. அடுப்பில் கடாயை வைத்து மிளகாய் வத்தல், கொத்தமல்லி, மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு எல்லாவற்றையும் லேசாக வறுத்து சிறிது நேரம் ஆறவிடவும். ஆறிய பின் மல்லித்தழையும் சேர்த்து மிக்ஸ்சியில் அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.                                                   
  3. தேங்காய், சின்ன வெங்காயம் இரண்டையும் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
  4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, சோம்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்கவும். 
  5. பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நல்ல பொன்னிறமானதும் தக்காளியை சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.
  6. தக்காளி வதங்கியதும் காளான், அரைத்த மசாலா, மஞ்சள் தூள், உப்பு இவற்றுடன் 200 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.                          
  7. மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். குழம்பு கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான காளான் குழம்பு ரெடி.

Thursday, November 21, 2013

பூரிக் கிழங்கு - 2

                                         
பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. உருளைக்கிழங்கு - 3
  2. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  3. கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி 
  4. கடலை மாவு - 1 தேக்கரண்டி 
  5. உப்பு - தேவையான அளவு                              
 தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. பெரிய வெங்காயம் -1
  5. தக்காளி - 1
  6. பச்சை மிளகாய் - 3
  7. கறிவேப்பிலை - சிறிது                                  
 செய்முறை -
  1. முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மூன்றையும் நீளவாக்கில் வெட்டி வைக்கவும். 
           
  2. குக்கரில் உருளைக்கிழங்கை வேக வைத்துக் கொள்ளவும். நீராவி அடங்கியதும் மூடியை திறந்து தண்ணீரை வடித்து சிறிது நேரம் ஆற விடவும். ஆறிய பின் தோலுரித்து மசித்து வைத்துக் கொள்ளவும்.                                                                        
  3. கடலை மாவை 2 மேஜைக்கரண்டி தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.
  4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.                                                                              
  5. வெங்காயம் நல்ல பொன்னிறமானதும் தக்காளியை சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.
  6. தக்காளி வதங்கியதும் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  7. கூட்டு கெட்டியாகும் போது கரம் மசாலா, கரைத்து வைத்துள்ள கடலைமாவு இரண்டையும் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். சுவையான பூரிக்கிழங்கு ரெடி.

உருளைக்கிழங்கு கூட்டு / Potato curry

பரிமாறும் அளவு - 3 நபருக்கு                                                        

தேவையான பொருள்கள் -
  1. உருளைக்கிழங்கு - 3
  2. மல்லிப்பொடி -2 மேஜைக்கரண்டி
  3. சீரகப்பொடி - 1 தேக்கரண்டி
  4. மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
  5. உப்பு - தேவையான அளவு                             
அரைக்க -
  1. தேங்காய்துருவல் - 4 மேஜைக்கரண்டி
  2. சின்ன வெங்காயம் - 4
  3. பச்சைமிளகாய் - 3
  4. தக்காளி - 1 சிறியது                                                                         
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி
  3. உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
  4. வெங்காயம் - 1/4 பங்கு
  5. கறிவேப்பிலை - சிறிது                                    

செய்முறை -
  1. குக்கரில் உருளைக்கிழங்கை வேக வைத்துக் கொள்ளவும். நன்றாக ஆறிய பின் தோலுரித்து சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.                 
  2. தேங்காய், பச்சைமிளகாய், தக்காளி, சின்ன வெங்காயம் எல்லாவற்றையும் மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.                               
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  4. வெங்காயம் பொன்னிறமானதும் மல்லிப்பொடி, சீரகப்பொடி, மஞ்சள்தூள், உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து 1 நிமிடம் கிளறவும். 
  5. பிறகு 200 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  6. மசாலாவாடை போனதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து கொதிக்க விடவும்.
  7. கூட்டு கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான உருளைக்கிழங்கு கூட்டு ரெடி. சாம்பார் சாதம், பூரி, சப்பாத்தியுடன் சேர்த்து பரிமாறலாம்.

Wednesday, November 20, 2013

அரைத்து விட்ட சாம்பார்

   
பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. துவரம்பருப்பு - 50 கிராம் 
  2. முருங்கைக்காய் - 6 துண்டுகள் 
  3. மாங்காய் - 4 துண்டுகள்
  4. கத்தரிக்காய் - 1
  5. கேரட் - 1
  6. தக்காளி -1
  7. மல்லித்தழை - சிறிது 
  8. காயம் - 1/4 தேக்கரண்டி 
  9. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  10. உப்பு - தேவையான அளவு                                
     அரைக்க -
  1. மிளகாய் வத்தல் - 2
  2. கொத்தமல்லி - 1 மேஜைக்கரண்டி 
  3. சீரகம் - 1 தேக்கரண்டி 
  4. மிளகு - 1/2 தேக்கரண்டி 
  5. வெந்தயம் - 1/2 தேக்கரண்டி 
  6. தேங்காய் துருவல் - 2 மேஜைக்கரண்டி            
     தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. வெங்காயம் - 1/4 பங்கு 
  5. கறிவேப்பிலை - சிறிது                                   
     செய்முறை -
  1. குக்கரில் துவரம்பருப்பு, காயம் மற்றும் அது முழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி மூடி அடுப்பில் வைக்கவும். நீராவி வந்ததும் வெயிட் போடவும். முதல் விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் கழித்து அடுப்பை ஆப் பண்ணி விடவும்.
  2. நீராவி அடங்கியதும் மூடியை திறந்து பருப்பை மசித்து வைத்துக் கொள்ளவும்.
  3. கத்தரிக்காய், கேரட், தக்காளி மூன்றையும் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  4. அரைக்க கொடுத்தவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
  5. குழம்பு வைக்கும் பாத்திரத்தில் நறுக்கி வைத்துள்ள கேரட், கத்திரிக்காய், மாங்காய், முருங்கை, தக்காளி மற்றும் அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக விடவும்.
  6. காய்கள் வெந்ததும் அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும்.
  7. மசாலா வாடை போனதும் வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து நன்றாக கலக்கி விடவும். பருப்பு கொதித்தவுடன் மல்லித்தழையை தூவி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
  8. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  9. வெங்காயம் பொன்னிறமானதும் சாம்பாரில் சேர்த்து நன்றாக கலக்கி விடவும். சுவையான அரைத்து விட்ட சாம்பார் ரெடி.
Related Posts Plugin for WordPress, Blogger...