Tuesday, January 28, 2014

உளுந்தங்களி / Ulunthu Kali


 தேவையான பொருள்கள் -
  1. கருப்பட்டி - 200 கிராம் 
  2. பச்சரிசி - 100 கிராம் 
  3. தோல் உளுந்து - 100 கிராம் 
  4. நெய் - 3 மேஜைக்கரண்டி
  5. நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி                                                  
செய்முறை -
  1. பச்சரிசி, தோல் உளுந்து இரண்டையும் வெயிலில் ஒரு மணி நேரம் காய வைத்து மிக்ஸ்சியில் திரித்துக் கொள்ளவும். வெயில் இல்லாவிட்டால் அடுப்பில் கடாயை வைத்து பச்சரிசி, உளுந்து இரண்டையும் போட்டு லேசாக வறுத்து திரித்துக் கொள்ளவும்.
  2. கருப்பட்டியை பொடித்துக் கொள்ளவும். 
          
  3. அடுப்பில் அடிக்கனமான பாத்திரத்தை வைத்து 50 மில்லி தண்ணீர் ஊற்றி  பொடித்து வைத்துள்ள கருப்பட்டியை போட்டு  150 மில்லி அளவுக்கு பாகு காய்ச்சவும். அடுப்பை சிம்மில் வைத்து பாகு காய்ச்சவும்.                                           
  4. கருப்பட்டி பாகை வடிகட்டியில் ஊற்றி வடித்துக் கொள்ளவும்.
  5. அடுப்பில் கடாயை வைத்து வடி கட்டிய கருப்பட்டி பாகு மற்றும் பாதி அளவு நெய் சேர்த்து கொதிக்க விடவும். 
  6. கொதிக்க ஆரம்பித்ததும் களி மாவை ஒரு குழம்பு கரண்டி வீதம் எடுத்து பாகின் மேல் தூவி கை விடாமல் கிளற வேண்டும்.                         
  7. இவ்வாறு மீதமுள்ள மாவையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கை விடாமல் கிளற வேண்டும். 
  8. கெட்டியாக மாவு சுருண்டு வரும் போது மீதமுள்ள நெய், நல்லெண்ணெய் ஊற்றி கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.                                      
  9. கையில் லேசாக எண்ணையை தொட்டுக் கொண்டு மாவு சிறிது சூடாக இருக்கும் போதே உருண்டைகளாக பிடிக்கவும். இந்த அளவுக்கு 16 களி உருண்டைகள் வரும். சுவையான உளுந்தங்களி ரெடி.                                                          
குறிப்புக்கள் -
  1. பச்சரிசி, தோல் உளுந்து இரண்டையும் சம அளவு எடுத்து மிசினில் திரித்து ஏர் டைட் பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளலாம். தேவையான பொழுது உபயோகபடுத்திக் கொள்ளலாம்.
  2. தோல் உளுந்துக்கு பதிலாக வெள்ளை முழு உளுந்தும் உபயோகிக்கலாம்.
  3. உளுந்தங்களி பெண் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

சௌசௌ பட்டர் பீன்ஸ் கூட்டு / Chayote butterbeans kootu


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. சௌசௌ - 1
  2. ப்ரெஷ் பட்டர் பீன்ஸ் - 100 கிராம் 
  3. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி 
  4. மல்லித்தூள் - 1 மேஜைக்கரண்டி 
  5. சீரகத்தூள் - 1 தேக்கரண்டி 
  6. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  7. தக்காளி -1
  8. உப்பு - தேவையான அளவு                                                    
அரைக்க -
  1. தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி                                
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. வெங்காயம் - 1/4 பங்கு 
  5. கறிவேப்பிலை - சிறிது                              
செய்முறை -
  1. குக்கரில் பட்டர்பீன்ஸ் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். நீராவி வந்ததும் வெயிட் போடவும். முதல் விசில் வந்தவுடன் அடுப்பை ஆப் பண்ணி விடவும். நீராவி அடங்கியதும் மூடியை திறந்து தண்ணீரை வடித்து சிறிது நேரம் ஆற விடவும்.
  2. ஆறிய பின் நீளவாக்கில் வெட்டி வைத்துக் கொள்ளவும். சௌசௌயையும் தோலுரித்து சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.                 
  3. வெங்காயம், தக்காளி இரண்டையும் வெட்டி வைக்கவும்.
  4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  5. வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து சுருள வதக்கி சௌசௌவை சேர்த்து ஒரு கை தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
  6. சௌசௌ வெந்தவுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து கிளறவும்.
  7. ஒரு நிமிடம் கழித்து பட்டர்பீன்ஸ் மற்றும் 100 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  8. மசாலா வாடை போனதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்க்கவும்.
  9. கூட்டு கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான சௌசௌ பட்டர் பீன்ஸ் கூட்டு ரெடி.                                          

Saturday, January 25, 2014

காலிபிளவர் பட்டாணி குருமா / Cauliflower GreenPeas Kuruma

                                                       


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. காலிப்ளவர் - 1 சிறியது 
  2. பச்சை பட்டாணி - 50 கிராம் 
  3. தக்காளி - 1
  4. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி 
  5. மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி 
  6. சீரகத்தூள் - 1 தேக்கரண்டி 
  7. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி 
  8. உப்பு - தேவையான அளவு 
  9. மல்லித்தழை - சிறிது                                        
வறுத்து பொடிக்க -
  1. பட்டை - 1 இன்ச் அளவு 
  2. கிராம்பு - 2
  3. சோம்பு - 1 தேக்கரண்டி 
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. பட்டை - 1/2 இன்ச் அளவு 
  3. கிராம்பு - 1
  4. பெரிய வெங்காயம் - 1
  5. கறிவேப்பிலை - சிறிது                              
அரைக்க -
  1. தேங்காய் துருவல் - 25 கிராம்                    
செய்முறை -
  1. பச்சை பட்டாணியை 4 மணி நேரம் ஊற வைத்து குக்கரில் 2 விசில் வரும் வரை வைத்து வேக வைத்து தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
  2. முதலில் 300 மில்லி வெந்நீரில் முழு காலி பிளவரை போட்டு 5 நிமிடம் மூடி வைக்கவும். 5 நிமிடம் கழித்து காலிபிளவரை எடுத்து பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.
  3. தக்காளியை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டி வைக்கவும்.                                                                       
  4. கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, சோம்பு மூன்றையும் பொன்னிறமாக வறுத்து மிக்ஸ்சியில் பொடித்துக் கொள்ளவும். தேங்காயையும் மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
  5. அடுப்பில் கடாயை வைத்து  எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். பிறகு கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  6. வெங்காயம் பொன்னிறமானதும் பட்டை கிராம்பு பொடி, வெட்டி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.                                                  
  7. நன்கு சுருள வதங்கியதும் காலிபிளவருடன் ஒரு கை தண்ணீர் தெளித்து வேகும் வரை நன்கு வதக்கவும்.
  8. காலிபிளவர் நன்கு வெந்ததும் வேக வைத்துள்ள பட்டாணி, மிளகாய் தூள், சீரகத்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து 1 நிமிடம் கிளறி 200 மில்லி தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.                                                  
  9. மசாலா வாடை அடங்கி வரும் போது அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். கிரேவி கெட்டியானதும் மல்லித் தழையை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி விடவும். 
  10. சுவையான காலி பிளவர் பட்டாணி குருமா ரெடி.

Friday, January 24, 2014

பட்டர்பீன்ஸ் கேரட் பொரியல் / Butterbeans Carrot Poriyal

               

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. ப்ரெஷ் பட்டர்பீன்ஸ் - 100 கிராம் 
  2. கேரட் - 100 கிராம் 
  3. சாம்பார் பொடி - 1 மேஜைக்கரண்டி 
  4. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி 
  5. தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி 
  6. உப்பு - தேவையான அளவு                                                   
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. மிளகாய் வத்தல் - 1
  3. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  4. உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  5. பெரிய வெங்காயம் - 2
  6.  கறிவேப்பிலை - சிறிது                             
செய்முறை -
  1. கேரட்டை தோலுரித்து சிறிதாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடிதாக நறுக்கி வைக்கவும்.
  2. குக்கரில் பட்டர் பீன்ஸ், கேரட் இரண்டும் முழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி மூடி அடுப்பில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும். நீராவி அடங்கியதும் மூடியை திறந்து தண்ணீரை வடித்து தனியே எடுத்து வைக்கவும்.                                               
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வத்தல், கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.                                                                             
  4. வெங்காயம் பொன்னிறமானதும் அவித்து வைத்துள்ள பட்டர்பீன்ஸ், கேரட், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கிளறி பின் சாம்பார் தூள், மஞ்சள்தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.
  5. இறுதியில் தேங்காய் துருவலை சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
  6. சுவையான பட்டர்பீன்ஸ், கேரட் பொரியல் ரெடி. சாம்பார் சாதம், தயிர் சாதத்துடன் பரிமாறவும்.
குறிப்பு -
  1. வெங்காயம் பெரியதாக இருந்ததால் ஒன்று  போதுமானது.

வெஜிட்டபிள் பிரியாணி / Vegetable Briyani

                                                               
பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பிரியாணி அரிசி - 150 கிராம் 
  2. உருளைக்கிழங்கு - 1
  3. கேரட் - 1
  4. காய்ந்த பட்டாணி - 50 கிராம்
  5. பெரிய வெங்காயம் - 3
  6. பச்சை மிளகாய் -1
  7. தக்காளி - 1
  8. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி 
  9. பட்டை கிராம்பு பொடி  - 1 தேக்கரண்டி 
  10. மல்லித் தழை - ஒரு கைப்பிடி அளவு 
  11. புதினா - ஒரு கைப்பிடி அளவு  
  12. மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
  13. பிரியாணி மசாலா - 1 தேக்கரண்டி 
  14. தயிர் - 2 மேஜைக்கரண்டி 
  15. உப்பு - தேவையான அளவு                       
தாளிக்க -
  1. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி 
  2. நெய் - 2 மேஜைக்கரண்டி 
  3. பட்டை - 1 இன்ச் அளவு 
  4. கிராம்பு - 2
  5. பிரிஞ்சி இலை - 1                                   
                          
தேங்காய் பால் எடுக்க -
  1. தேங்காய் - 100 கிராம்                                   
செய்முறை -
  1. பட்டாணியை தண்ணீரில் 4 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
  2. உருளைக்கிழங்கு, கேரட், தக்காளி மூன்றையும் பொடிதாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், பச்சைமிளகாய் இரண்டையும் நீளவாக்கில் வெட்டி வைக்கவும்.
  3. தேங்காயை மிக்ஸ்சியில் அரைத்து 300 மில்லி அளவுக்கு பால் எடுத்துக் கொள்ளவும்.
  4. அரிசியுடன் தேங்காய் பாலை சேர்த்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  5. அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய், நெய் இரண்டையும் ஊற்றி சூடானவுடன்  பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை போட்டு தாளிக்கவும். பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.                                                             
  6. வெங்காயம் பொன்னிறமானதும்  பட்டை கிராம்பு பொடி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போனதும் தக்காளியை போட்டு நன்கு சுருள வதக்கவும்.  
                                      
  7. தக்காளி நன்கு வதங்கியதும்  மல்லித்தழை, புதினா சேர்த்து வதக்கவும்.
  8. பிறகு கேரட், ஊற வைத்த பட்டாணி, உருளைக்கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
  9. அதோடு தயிர், மிளகாய்தூள், பிரியாணி மசாலா சேர்த்து 1 நிமிடம் கிளறவும். 
  10. பிறகு தேங்காய் பாலில் ஊற வைத்த அரிசியை சேர்த்து நன்றாக கலக்கி மூடி வைக்கவும்.
  11. நீராவி வந்ததும் வெயிட் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து 15 நிமிடங்கள் கழித்து  ஆப் பண்ணி விடவும்.                                                          
  12. விசில் வர தேவை இல்லை. நீராவி அடங்கியதும் குக்கரை திறந்து பிரியாணியை லேசாக ஒரு முறை கிளறி வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி விடவும். சுவையான பிரியாணி ரெடி.
குறிப்புக்கள் -
  1. காலிபிளவர், பீன்ஸ் என்று அவரவர் விருப்பப்படி காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்.

Wednesday, January 22, 2014

இஞ்சி பூண்டு பேஸ்ட் / Ginger Garlic Paste


தேவையான பொருள்கள் -
  1. இஞ்சி - 100 கிராம்
  2. பூண்டு - 125 கிராம்
செய்முறை -
  1. இஞ்சியை நன்றாக கழுவி தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
  2. பூண்டை தோலுரித்து பொடிதாக நறுக்கி வைக்கவும்.
  3. நறுக்கிய இஞ்சி, பூண்டு இரண்டையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸ்சியில் போட்டு நன்றாக அரைக்கவும்.
  4. இஞ்சி பூண்டு பேஸ்ட் ரெடி. அரைத்த பேஸ்டை ஒரு பாட்டிலில் போட்டு பிரிஜ்ஜில் வைத்து உபயோகிக்கவும்.
  5. இஞ்சி பூண்டு பேஸ்ட் குருமா, அசைவ குழம்பு, பிரியாணி வகைகளுக்கு உபயோகப்படுத்தலாம்.
Related Posts Plugin for WordPress, Blogger...