Wednesday, February 12, 2014

டிபன் சாம்பார் / Tiffin Sambar



பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பாசிப்பருப்பு - 100 கிராம் 
  2. காயத்தூள் - 1/4 தேக்கரண்டி 
  3. உருளைக்கிழங்கு - 1
  4. கேரட் - 1
  5. தக்காளி -1
  6. பச்சை மிளகாய் -1
  7. அச்சு வெல்லம் - சிறிய துண்டு 
  8. சாம்பார் பொடி - 1 மேஜைக்கரண்டி 
  9. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி 
  10. உப்பு - தேவையான அளவு 
  11. மல்லித்தழை - சிறிது
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. நறுக்கிய வெங்காயம் - 1/4 பங்கு 
  5. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை -
  1. அடுப்பில் கடாயை வைத்து பாசிப்பருப்பை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
  2. குக்கரில் பருப்பு மற்றும் அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, காயத்தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
  3. உருளைக்கிழங்கு, கேரட், தக்காளி, பச்சை மிளகாய் எல்லாவற்றையும் வெட்டி வைக்கவும்.
  4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  5. வெங்காயம் பொன்னிறமானதும் வெட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கு, கேரட், பச்சை மிளகாய், தக்காளி எல்லாவற்றையும் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
  6. பின்னர் சாம்பார்பொடி, மஞ்சள்தூள் சேர்த்து ஒரு தடவை கிளறி அதனுடன் உப்பு, 200 மில்லி தண்ணீரும் சேர்த்து கொதிக்க விடவும்.                                 
  7. காய்கள் நன்கு வெந்து மசாலா வாடை அடங்கியதும் அவித்து வைத்துள்ள பருப்பு, வெல்லத் துண்டு சேர்த்து கொதிக்கவிடவும்.
  8. சாம்பாரை சுற்றி நுரை கூடி வரும் போது மல்லித்தழையை தூவி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான டிபன் சாம்பார் ரெடி.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...