Wednesday, November 26, 2014

அரைக்கீரை பொரியல் / Araikeerai Poriyal


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. அரைக்கீரை - 1 கட்டு 
  2. துவரம் பருப்பு - 2 மேஜைக்கரண்டி 
  3. தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி 
  4. உப்பு - தேவையான அளவு 
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. பச்சை மிளகாய் - 2
  5. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. முதலில் கீரையை ஆய்ந்து தண்ணீரில் நன்றாக கழுவி பொடிதாக நறுக்கி வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் நீளவாக்கில் வெட்டி வைக்கவும். 
  2. துவரம் பருப்பை 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து தண்ணீரை வடித்து   வைத்துக் கொள்ளவும்.                                                      
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.
  4. கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  5. வெங்காயம் பொன்னிறமானதும் கீரை மற்றும் பருப்பை சேர்த்து போட்டு கிளறவும்.                                                       
  6. பிறகு உப்பு சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கீரை வேகும் வரை கிளறவும்.                                                                                      
  7. இறுதியில் தேங்காய் துருவல் சேர்த்து உப்பு சரி பார்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான அரைக்கீரை பொரியல் ரெடி. 

Saturday, November 15, 2014

கேரட் சட்னி / Carrot Chutney

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. கேரட் - 2
  2. சின்ன வெங்காயம் - 10
  3. தக்காளி - 1
  4. மிளகாய் வத்தல் - 2
  5. கடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி 
  6. காயத்தூள் - சிறிது 
  7. உப்பு - தேவையான அளவு                          
தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. முதலில் கேரட், வெங்காயம், தக்காளி மூன்றையும் பொடிதாக வெட்டி வைக்கவும். 
  2. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் கடலைப்பருப்பை போட்டு நன்கு வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.                                                   

  3. பிறகு அதே கடாயில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் கேரட்டை போட்டு இரண்டு நிமிடம் வரை வதக்கி  வேறு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும். 
  4. அடுத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வத்தல் போடவும். பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும். 
  5. வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி சுருள வதங்கியதும் காயத்தூள், உப்பு சேர்த்து கிளறி சிறிது நேரம் ஆறவிடவும்.

  6. ஆறிய பிறகு மிக்ஸ்சியில் வதக்கிய அணைத்து பொருட்களையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.                                                
  7. அடுப்பில் கடாயை வைத்து மீதமுள்ள ஒரு மேஜைக்கரண்டி நல்லெண்ணைய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து சட்னியில் ஊற்றி கலக்கி விடவும். சுவையான கேரட் சட்னி ரெடி. இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.                                  

Tuesday, November 4, 2014

வெங்காய குருமா / Onion kurma

                           
பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பெரிய வெங்காயம் - 2
  2. தக்காளி - 1
  3. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி 
  4. மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி 
  5. சீரகத்தூள் - 1 தேக்கரண்டி 
  6. கறிமசாலாத்தூள் - 1 தேக்கரண்டி 
  7. உப்பு - தேவையான அளவு 
  8. கறிவேப்பிலை - சிறிது 
  9. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி                 
அரைக்க -
  1. தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி 
  2. முந்திரிப்பருப்பு - 4
  3. ஏலக்காய் - 2
செய்முறை -
  1. முதலில் வெங்காயம் தக்காளி இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும். தேங்காய் துருவல், முந்திரிப்பருப்பு, ஏலக்காய் எல்லாவற்றையும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.                                                                    

  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி இரண்டையும் சேர்த்து நல்ல பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  3. பிறகு மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், கறிமசாலாத்தூள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். பிறகு அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கிளறி விடவும்.
  4. மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து குருமா கெட்டியாகும் வரை அடுப்பில் வைத்திருந்து கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும். சுவையான வெங்காய குருமா ரெடி. பூரி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடலாம்.        
Related Posts Plugin for WordPress, Blogger...